வேண்டும் என்ற நினைவோடு
வெறுமையாய் இருந்த
மனதோடு தேடலாய்
ஒரு நடை பயணம்
வெறுமையை நீக்கிவிட்டு
வேராய் நீ நுழைந்த போது
சுகமான நினைவுகளுடன்
ஒரு நடை பயணம்
சுகமான நினைவுகள்
சுமையாகி போன போது
இணகங்கள் பிணக்குகளாகி
பிரிவுகளுடன் ஒரு நடை பயணம்
பிரிவுகள் நினைவுகளாகி
நினைவுகள் ஏக்கங்களாகி
ஏக்கங்கள் காதிருப்புகளோடு
ஒரு நடை பயணம்
பயணித்து பயணித்து
பாலைவனம் தாண்டி
சோலை வனம் சென்று
சுகமாய் இருப்பேனா இல்லை
கால் தேய நடந்து நடந்து
கால ஓட்டத்தில் காணமல் போய் விடுவேனா
காரிகையே உனக்குத்தான் தெரியும்
என் பயணத்தின் நிறைவு


அருமை...
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி அகிலா
Deleteகால் தேய நடந்து நடந்து
ReplyDeleteகால ஓட்டத்தில் காணமல் போய் விடுவேனா
nice ma
ReplyDeleteநன்றி தமிழ்
ReplyDeletearumai
ReplyDeleteநன்றி ஜீவா
ReplyDelete