உன் உருவத்தை மட்டும் பார்த்த கண்கள்
இன்று கண்ணீரை நிறைத்து
நிற்கின்றன
உன் பேச்சை மட்டுமே கேட்டு
கொண்டிருந்த
என் செவிகள் கேளாமல்
போய்விட்டன
உன்பெயரை மட்டுமே சொல்லி
கொண்டிருந்த
இதழ்கள் ஊமையாகி போய்
விட்டன
நீ இல்லாத அருகாமை அறியாது
என் விரக தாபங்கள் ராகமாய் தாளமாய்
நிலவில்லா வானத்தில் வெளிச்சத்தை தேடுகின்றன
தளர்ந்து போன மனதிற்கு
மட்டுமே தெரியும்
நிறைந்து போன கண்களில்
நீர் எதற்கென்று
எனி ஒரு தருணத்தில் காண
நேரும் போது
ஓர விழியில் கண்ணீரும் இதழில் புன் சிரிப்பும்
வேண்டும் என்று உனக்காய் காத்திருப்பில்

//எனி ஒரு தருணத்தில் காண நேரும் போது
ReplyDeleteஓர விழியில் கண்ணீரும் இதழில் புன் சிரிப்பும்
வேண்டும் என்று உனக்காய் காத்திருப்பில்// nice ma
காண நேரும்போது நீண்ட கால தவிப்புகள் அரங்கேறுமோ இல்லை காணாது எல்லாம் அழிந்து போகுமோ....
ReplyDeleteஉங்கள் வரவுக்கு நன்றி தமிழ்