Friday, 7 September 2012

அன்னியனாகவாவது உன்னுள்


அறையினுள் நடந்த நம்கால் தடங்கள்
இன்னும் அழியவில்லை
உன் கடைசி முத்தம் இன்னும் காயவில்லை
உன் கடைசி அரவணைப்பு இன்னும் அகலவில்லை
உன் ஓரபார்வை தந்தபிரியா விடை சமிக்ஞை
இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை
இதெல்லாம் அகலவில்லை
ஆனால் அதற்குள் நீமட்டும் அகன்றதென்ன

உன் சந்தோஷதிற்க்காக விலகிப்போக எண்ணிய என்னக்கு
உன் நினைவுகளில் இருந்து விலக முடியவில்லை
உன்னை சந்திப்பேன் என்ற நினைவில்
அன்பை தேடிவந்த கால்கள் பெருமூச்செறிந்து நின்றன

நீ என்னை அந்நியபடுத்திய போது
உன்னை மறக்க முயன்றேன்
உன்னை மறப்பதாக எண்ணி மீண்டும் மீண்டும் உன் நினைவுகளில்
மூழ்கி போய் மூச்சடைத்து நெஞ்சு முட்டியது

உன் கடைசிவரை நான் வருவேன் என்று சொன்னவள்
கடைதெருவில் வீசிவிட்டு சென்றாய்

அன்பு அழிவதில்லை என்று நினைத்து இருந்தேன்
ஆனால் நீ அதை உன்னில் அழித்து விட்டாய் என்று
எண்ணியபோது அது என்னில் இருந்து என்ன பயன்

உன்னை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை
உன் உள்ளம் விரும்பும் உண்மையை உன்னிடம் விட்டுவிட்டு
வலியை மட்டும் என்னுடன் எடுத்து செல்கிறேன்

எனக்கு மட்டும் நீ என்று நினைத்து இருந்தேன்
ஆனால் என்னை மட்டும் நீ தடை செய்தாய்

ஒவ்வரு முறையும் உன் கவிதைகளை
வேறு யாரரோ படித்து கிழித்து போட்ட
துகள்களில் இருந்து துன்பத்தோடு வாசித்தேன்

நாம் அன்பாய் கழித்த காலங்களில் இன்று
நான் மட்டும் தனியே நிற்கிறேன்

அன்பு கொண்டு நான் செய்த தவறுகள்
அதற்காக நீ திட்டிய தீ காயங்கள்

உன் நினைவுகளில் நான் இல்லை என்ற போதும்
வாழ்கையை வாழ்ந்து தான் தீர்க்க வேண்டும்
என்றாவது உன்னை சந்திப்பேன் என்று
அன்பு கொண்டு இல்லாவிட்டாலும்
அன்னியனாகவாவது உன்னுள்
நான் இருப்பேன் என்ற நம்பிக்கையில்  


No comments:

Post a Comment