Sunday, 16 September 2012

சுதந்திர நாட்டிற்கு நானே ராணியாய்




ராஜகுமாரிகளாய் நாங்கள் தங்க கூண்டுகளில்
கால்நடையாய் மிருகங்கள் முள் வேலிகளில்
இரண்டும் ஒரே இடத்தில்..
காலையில் அவை மேச்சலுக்காக வெளியில்
நாங்கள் உணவுகாக சமயலறையில்
கவனப்படுத்தாத ஒரு வாழ்வு...
மிகுந்த சம்பிரதாயங்களுடன்

ராஜகுமாரனும் வந்தான்

சம்யுக்தையை தூக்கி சென பிரிதிவிராஜனை போல
கால்நடைகளே என்பரித்வியுடன் ப்ரியமாக செல்கிறேன்

அவைகளும் சங்கடத்துடன் பிரியா விடைகொடுத்தன

ஆனால் நான் மட்டும் என் ப்ரிதிவியுடன் பிரியமாக இல்லை

காலனும் பிரியமாக இருந்தான் என்றுஆன போது

சம்பிரதாய சிறையில் தகரகூண்டில் மீண்டும்

அன்று சொல்லியள சிறைவசிகளும் கால்நடைகளும் ..

இன்றோ நாகரிக உலகின்

நஞ்சுமுகம் அறியா நல்பெண்ணாய்

போராட்டத்தில் குதிக்கபடைகள் இல்லை

திரிபடை கூட்டம் கூட்டாமாய்

எதிராளியாக நான் துருபிடித்த வாழ்களோடு..

கறைபடிந்த கண்ணாடிவழியே சூரிய வெளிச்சம்

அந்த வெழிச்சத்தின் துணையோடு

சில காட்டுபூகள் தலையில் சூடி

போருக்கு தயாரானேன் ..

வீழ்ந்தனர் எதிகளின் சிறுபடை

தகரவாழ் தங்கமாக மின்நிற்று

வீறு கொண்டு நடந்தேன் ஓற்றை ஆளாயை

இன்று என் ராஜ்யத்தில் நானே மகராணி

இன்று நான் சிறைபிடித்தேன் சம்ரதாய நடப்புகளை

அவை என்முன்னே செல்லாகாசாய் சேவை செய்கின்றன

எனி ஒரு சிறை வேண்டாம் விடுவித்தேன் அவைகளை

கூடவே நானும் சுதந்திர பறவையாய் ...

என் நாட்டிற்கு நானே ராணியாய்

No comments:

Post a Comment