கடிகாரத்தின் சத்தத்தில்
பலமாய் செல்லும் வாகன இரச்சலில்
பயம் கொள்ளும் என்னில்
அச்சத்தை போக்கிய நீ
நான் அச்சமே இல்லாமல் வாழ
நினைக்கும் போது நீ
என் அருகில் இல்லாமை
நிரந்தர அச்சமாகிவிடுமோ
என்று அச்சப்பட
என் அச்சத்தை போக்கிய நீ
என் அச்சத்தின் காவலன்
உனிடம் நான் கேட்பது
எனக்குள் இருக்கும் ஒரே அச்சத்தை
என் கால்கள் மீண்டும் பதியுமோ
நான் நடந்த வீதியில்…..


No comments:
Post a Comment