இணையாய் திரிந்த
இரு புறாக்கள்
இருவேறு திக்குகளில்
இரவின் அழைப்பில்
இதமாய் உறங்கிய மனதுகள்
இரு வேறுபட்டு சென்றன
அன்பு பூத்த மனங்களில்
அரளி பூத்து இடராய் போனது
சிறகடித்து பறந்த
இதய புறாக்களிலிரூந்து
வீணாய் பிரிந்த
இறகுகள் போல
இனிமையான நினைவுகள்
வீணற்று போனது
இன்ப மழையில் நனைந்தும்
குளிரில் அணைத்தும்
சூட்டில் இணைத்தும்
இருந்த நினைவுகள்
மனதில் உருகிபோகின்றது
ஒன்றாய் முழங்கிய வசந்த
சங்கின் நாதம்
உடைந்து போய்
சிதைந்த நாதத்தில்
வேதனை தேறிக்கின்றது
மலையின் அடிவாரத்தில்
மங்கிய நிலாவில்
மஞ்சத்தில் கூடி நின்ற
நினைவுகள் எல்லாம்
கண்ணீரால் அழிந்து போனதோ
எனி இணை புறாக்கள்
ஒன்று சேருமோ ?

No comments:
Post a Comment