Friday, 31 August 2012

நினைவுகள்


தூங்கினாலும்
தூங்கா உன் நினைவுகள்


ஒன்றாய் அமர்ந்த இடங்கள்
காலையில்
படிக்கட்டுகளில்
இனிமையான சுவையுடன்
மங்காத நினைவுகள்


உணவருந்தும் போது
விவாதங்களில் உன் நினைவுகள்


அருகில் அமர்ந்து
அன்பை பரிமாரி 
நினைவுகளை பகிர்ந்து கொண்டபோதும்
உன் நினைவுகள்


சின்ன சின்ன சண்டைகள்
ஆறிய காயங்கள் ஆறாத நினைவுகள்


துயிலும் போது
என் அரவணைப்பில் உன்
நினைவுகள்


எல்லவற்றிர்கும் நான் இருக்கிறேன்
என்னவள் என்னையே
நீங்கி சென்றாள்
விளக்கம் சொல்ல அவளுக்கு
ஒருகாரணம் நான் விலக வேண்டும் என்பது
நிஜமான நினைவுகள்


இவை அனைத்தும் நீங்காத
நினைவுகளாய் நெஞ்சோரம்
தோன்றும் போது விழியோரம்
நீர் துளி அதனுள் உன் உருவம்


மறந்து போய்விட்ட உனக்கு
மறக்காத நினைவுகளாய் என்னுள்
உன் நினைவுகள் ..... 

Monday, 27 August 2012

கூட்டு கிளி ....

அன்பெனும் காட்டில்
அழகான இரு சிறுகிளிகள்............

அடுத்தடுத்த கூட்டில்
ஒரே காட்டில்.............

கூடி மகிழ்ந்த
கூட்டினை
கூடாமல் போனது
ஜோடி கிளி...............

அதன் மீது
குற்றமில்லை
கூட்டினுள்
குழப்பத்தில் தடுமாறிய
ஜோடிகிளி.................

சிந்தை எல்லாம்
சிந்தனையாய்
மறைந்து போனது
ஜோடிகிளி................

நினைவுகள் ஊஞ்சல் ஆட
நிலை தடுமாறிய கூட்டு கிளி..........



கூட்டாய் வந்தது ஜோடிகிளியின்
அன்பில் வீட்டுகிளி.............


பின்னில் வந்து
கண்ணை மூடி
கழியாட நினைத்த
கூட்டு கிளி.............

தவறாக எண்ணிய
வீட்டு கிளி
சிறு உரசல்கள்
சிறு தீயாய்..............

கூடு பற்றி எரிய
அதனுள் இருகிளிகள்
பேசா கிளி பேசி
மறைந்தது..........

தான் கூட்டிய
தீயில் வழியறியாது
கூட்டு கிளி............

வீட்டு கிளியின்
வருகையில்
தீயாய் உருகி
தபசில்........


Sunday, 26 August 2012

காத்திருப்பேன் கனவுகளுடன்...


நீ என் அருகில்

இல்லை என்றாலும்
உன் இதய துடிப்பு என்னுள்

காதலின் துடிப்போ

கனலின் வெம்மையோ
அறியமுடியவில்லை

நீ எனக்கு மட்டும்

நம் உணர்வுகள்
நமக்கு மட்டும்

வேரிலும் காயிலும் பூவிலும்

வலம்வரும் எறும்பு போல்
உன் அன்பு முழுவதும்
எனக்கு மட்டும்

அதில் காயம் பட்டது என்று

வேரோடு உன்னை அழித்தாய்
நானும் அழிந்தேன்

அறிந்து கொண்டு செய்யாமல்

அன்பு கொண்டு செய்த
தவறுகள் உன்னால் ஏன்
தெரிந்துகொள்ள முடியவில்லை





என்னில் உன்னை தேடவிட்டு

எங்கே சென்று மறைந்தாய்

எங்கிருந்தாலும் உன்

நினைவுகளின் எச்சமாய்
கனவுகளின் மிச்சமாய்
காத்திருப்பேன் கனவுகளுடன்...

 

Saturday, 25 August 2012

இணை புறாக்கள்


இணையாய் திரிந்த
இரு புறாக்கள்
இருவேறு திக்குகளில்

இரவின் அழைப்பில்
இதமாய் உறங்கிய மனதுகள்
இரு வேறுபட்டு சென்றன

அன்பு பூத்த மனங்களில்
அரளி பூத்து இடராய் போனது

சிறகடித்து பறந்த
இதய  புறாக்களிலிரூந்து  
வீணாய் பிரிந்த
இறகுகள் போல
இனிமையான நினைவுகள்
வீணற்று போனது

இன்ப மழையில் நனைந்தும்
குளிரில் அணைத்தும்
சூட்டில் இணைத்தும்
இருந்த நினைவுகள்
மனதில் உருகிபோகின்றது 

ஒன்றாய்  முழங்கிய வசந்த
சங்கின் நாதம்
உடைந்து போய்
சிதைந்த நாதத்தில்
வேதனை தேறிக்கின்றது

மலையின் அடிவாரத்தில்
மங்கிய நிலாவில்
மஞ்சத்தில் கூடி நின்ற 
நினைவுகள் எல்லாம்
கண்ணீரால் அழிந்து போனதோ
எனி இணை புறாக்கள்
ஒன்று சேருமோ ?