Monday, 29 October 2012

நடை பயணம்



வேண்டும் என்ற நினைவோடு 
வெறுமையாய் இருந்த 
மனதோடு தேடலாய்
ஒரு நடை பயணம் 

வெறுமையை நீக்கிவிட்டு
வேராய் நீ நுழைந்த போது 
சுகமான நினைவுகளுடன் 
ஒரு நடை பயணம் 
 
சுகமான நினைவுகள் 
சுமையாகி போன போது
இணகங்கள் பிணக்குகளாகி 
பிரிவுகளுடன் ஒரு நடை பயணம் 

பிரிவுகள் நினைவுகளாகி 
நினைவுகள் ஏக்கங்களாகி 
ஏக்கங்கள் காதிருப்புகளோடு
ஒரு நடை பயணம் 

பயணித்து பயணித்து 
பாலைவனம் தாண்டி 
சோலை வனம் சென்று 
சுகமாய் இருப்பேனா இல்லை 


கால் தேய நடந்து நடந்து 
கால ஓட்டத்தில் காணமல் போய் விடுவேனா 
காரிகையே உனக்குத்தான் தெரியும் 
என் பயணத்தின் நிறைவு 



Wednesday, 24 October 2012

மீண்டும் பிறக்க ஆசை




ஒரு வினாடி
தாமதத்தின் அருமை 
இரயிலை தவற 
விட்டவனுக்குதான்
தெரியும் 

ஒரு வருஷ
தாமதத்தின் அருமை 
பரீட்சையில் தோற்று
போனவனுக்குதான்
தெரியும் 

உன்னை கைபிடிக்க
நான் எடுத்த தாமதம் 
இந்த ஜென்மத்தில் 
உன்னை இழந்த 
எனக்குதான் தெரியும்  

ஆகையால் மீண்டும்
பிறக்க ஆசை
மறுபடியும் உன்னுடன்
தாமதமில்லாத
பயணங்களுடன் 

நான் மட்டும்




கல்லூரி வளாகத்தில்
நம் கால் படியாத
இடங்கள் இல்லையே

கண்களின் வழியே
காதல் உணர்வுகள்  உன்
கண்ணாடியையும் தாண்டி
கவர்ந்து இழுக்குமே

சுகங்களுடன் உன்
சுமைகளையும் தூக்கி
பயணம் செய்தோமே

காவிரி கரையில்
தோழோடு தோழ் சேர்த்து
கனவுகளோடு இருந்தோமே

இன்று எல்லா   நினைவுகழுடன்
நான் மட்டும்
நீ இல்லாமல்

ஒரு பின்னோட்ட பயணம்



பாதை ஓரத்தில்
பாவை உன்னுடன் 
வாய் பேசாத மொழிகளை
கண்களால் பேசி

நின்று உரையாடிய

நினைவுகள் எல்லாம்
கால ஓட்டத்தில் 
கரைந்து போன காட்சிகள்

நினைவு ஓட்டத்தில்

மங்கலாய் மனதில்
மறந்து போன நினைவுகள் 
மங்காத ஏக்கங்களுடன்

ஒரு பின்னோட்ட பயணம்  

Monday, 22 October 2012

தாவணி கனவுகள்



கதிரவனின் வருகையின் முன்
காலை துயில் கலைத்து
ஈர குழல் முடிந்து முற்றம் பெருக்கி
வாயில் படியில்  தீபம் ஏற்றி

பூஜை அறையில் பூக்கள் சூடி
பின் தொழுது
நீல தாவணி சூடி பள்ளி செல்லும்
பைங்கிளியோ என்னும் அழகு

மாலையிலே மாமரத்தின் அருகில்
மயக்கத்துடன் உன்வரவுகாய் நானும்
மஞ்சள் வெயிலில் தங்கமென ஜொலித்து
என் அருகில் ஸ்வரங்களின் கூட்டு சேர்க்கையாய் நீயும்

பாட புதகத்தினோடு நீ 
காதல் அத்தியாயங்களோடு நான்
பரிமாறிய நினைவுகள் 

பதிவானவை பாதி முடிவாகதவை மீதி
அசைபோடுவோம்
அடுத்த ஜென்மம் வரை ...

Tuesday, 16 October 2012

ஏன் மனமே...



சுகமாய் நினைத்து 
சுமந்த மனது 
சுமையாய் நினைத்து 
சூன்யமாக்கிய பிறகு 
சுயம் கெட்டு ஏன் 
சுற்றி சுற்றி வருகிறாய் மனமே

நினைவுகள் எல்லாம்
நீர்த்து நிர்மூலமானபிறகு
நீ மட்டும் நீங்காமல் நிற்கிறாய்
ஏன் மனமே....
  
வேண்டாம் என்று
வெற்றிடமாக்க பட்டு 
வெறுமையாகி போனபோதும் 
வேண்டும் என்று ஏன்
வீழ்ந்து கிடக்கிறாய் மனமே

வென்று விட்டதாய் 
வீறு கொண்டு  
வெறுமையான உறுதிகொண்டு
வலுவிலாமல் போன பிறகு 
வலியே ஏன் செல்கிறாய் மனமே  

காத்திருப்புகள் எல்லாம்
கானல் நீராகி போனபிறகு
காலத்தினோடு கலவரம் 
செய்கிறாய் ஏன்  மனமே.. 

பார்வைகள் எல்லாம்
பழுதாகி போனபிறகு
பாதையே இல்லாத வழியில்
பாசத்தோடு ஏன் நிற்கிறாய் மனமே...

வழி அறியா பாதையில் 
வழிதடம் அழிந்து 
வழி தெரியாது நிற்கையில் 
வராத ஊருக்கு வழி தேடுகிறாய் 
ஏன் மனமே...





Sunday, 7 October 2012

உன்னை வெல்ல வழி காட்டு ..



உன்னை முதன் முதலில்  கண்டபோது 

உன்னுள் இருந்தவைகள் எதுவுமே தெரியவில்லை 

முதல் பார்வையில் உன்னை என்னுள் பதியம் போட்டாய்

வேதனைகளை மறக்கும் வித்தையை கொடுத்தாய் 

உயிரின் வெம்மையை உணரவைத்தாய் 

உயர்ந்த ஒழுக்கத்தை என்னில் விதைத்தாய் 

வாழ்வின் உண்மைகளை வழித்தடமாய் காட்டினாய் 

பகலை இரவாக்கி காட்டினாய்

இரவினை இல்லாமல் ஆக்கினாய் 

மென்மையான பெண்மையையும் 

பெண்மையினுள் பேராற்லையும் காட்டினாய் 

கனிவையும் காட்டினாய் காளியாகவும் நின்றாய்

புன்னகையிலும் புரிதல் உண்டு என்று புதுமை காட்டினாய் 

கவிபாடவைத்து கவிஞனாக மாற்றினாய்

உன் நினைவுகளை என் கனவுகளோடு இணைத்தும் காட்டினாய் 

என் கேள்விகளுக்கு எல்லாம் பதிலாய் நின்றாய் 

அருகில் இருப்பதை விட அகன்று இருப்பதின் வலியை காட்டினாய் 

இன்று காத்திருப்பின் வலியையும் உணரவைத்து 

அதை வெல்லும் வழியை மட்டும் சொல்லாமல் 

மறைத்துவிட்டாயே அன்பே 

உன்னை வெல்ல வழி காட்டு அன்பே.... 

Wednesday, 3 October 2012

உனக்காய் காத்திருப்பில்






உன் உருவத்தை மட்டும் பார்த்த கண்கள்   
இன்று கண்ணீரை நிறைத்து நிற்கின்றன 

உன் பேச்சை மட்டுமே கேட்டு கொண்டிருந்த 
என் செவிகள் கேளாமல் போய்விட்டன 

உன்பெயரை மட்டுமே சொல்லி கொண்டிருந்த 
இதழ்கள் ஊமையாகி போய் விட்டன 

நீ இல்லாத அருகாமை அறியாது
என் விரக தாபங்கள் ராகமாய் தாளமாய்
நிலவில்லா வானத்தில் வெளிச்சத்தை தேடுகின்றன  

தளர்ந்து போன மனதிற்கு மட்டுமே தெரியும் 
நிறைந்து போன கண்களில் நீர் எதற்கென்று

எனி ஒரு தருணத்தில் காண நேரும் போது
ஓர விழியில் கண்ணீரும் இதழில் புன் சிரிப்பும் 
வேண்டும் என்று உனக்காய் காத்திருப்பில்