காகிதம் எடுத்து கைகளால் கிறுக்கினேன்
கவிதைகள் எழுத வார்த்தைகள் தேடினேன்
எதை எழுதவென்று தெரியாமல் நின்றேன்
உன்னோடு பேச வழியும் இல்லை
என்னோடு பேச உன் விழியும் இல்லை
உன் அருகில் இருக்கும் நேரத்தை தொலைத்தேன்
என் அருகில் இருக்கும் தூரத்தை அளந்தேன்
உன்னை பார்க்க தோன்றும் தவிப்பை நீ அறிய வில்லை
அந்த ஆசையை தவிர்க்க என்னாலும் இயலவில்லை
நீ என் கவிதைகளை வாசிக்கிராயோ தெரியவில்லை
ஆனால் என் கவிதைகளால் வாசிக்கபடுகிறாய்
எங்கோ இருக்கும் உன் இதயம் தினம் தினம்
என் கனவுகளுக்கு இதமான ஒத்தடம்
இரவினில் கூட உன் நினைவுகளில் கனவுகள்
காலையில் கண்விழிக்கும் முன் கனவுடன் கலைந்தும் போகிறாய்
தொலைத்துவிட்டாய் உன்னுள் தேடவிட்டாய் என்னுள்
கவிதை என்று நினைத்து கிறுக்கல்களாகி முடிந்து
உருவிலாது போனது என் கனவுகளை போல





.jpg)






.jpg)

