Thursday, 27 December 2012

எங்கிருக்கிறாய் என் அன்பே ..




வாடை காற்றில் குளிராக நிற்கிறாயோ 
மேகத்தினுள் மழையாக இருக்கிறாயோ 

என் அகத்தினுள் அரூபமாக  நிற்கிறாயோ 
என் அகந்தையை அகற்றும் கனிவாக இருக்கிறாயோ 

அர்த்த ராத்திரியில் தூக்கமாக நிற்கிறாயோ 
தூக்கத்தில் கனவாக இருக்கிறாயோ 

அலைகடலின் ஆழமாக நிற்கிறாயோ 
கடல் அலையின் நுரைகளாக இருக்கிறாயோ 

உன்னை காண பூக்களாய் மலர்ந்து நிற்கிறேன் 
நீயோ பாலைவனத்தில் மழையாக இருக்கிறாய்  

நீ இருந்தும் இல்லாமல் நிற்கிறாய் 
நான் உன்னை தொலைத்தும் தொலையாமல் தேடிகொண்டு  இருக்கிறேன் 


Saturday, 22 December 2012

நிழலாய் ஓர்மைகள்




புலர்ந்தும் புலராத காலை பொழுதில் 
உன்னை காண ஓடிவந்த காலங்கள் 
யாவும் மறக்க முடியாமல் கனவுகளில் 
விழிகளில் மட்டும்  ஓர்மையில்

இருள் சூழ்ந்த இரயில் வண்டி கூட 
உன்பகை கொண்டதால் புகை சூழ்ந்து
சிவப்பு விளக்கை எனக்காய் இட்டு 
பச்சை விளக்கோடு பாசமில்லாது போனதே

இடைவெளி இல்லாது ஒலித்த 
அலைபேசி கூட
அன்பே உன்அழைப்பு இல்லாமல்    
அலங்கோலமாகி போனதே 


உணர்வில்லா உறிஞ்சல்களுடன் 
சுவையான காபி கூட
உன் அருகாமை இல்லாது
சுவை இல்லாது போனதே 

நிறைவான வாதங்களுடன் 
அறை முழுவதும் நின்ற விவாதங்கள் யாவும் 
சிறையாகி போனதே எனி அது 
பிறையாகி வளர்வது என்னாளோ 

கடந்த கால நினைவுகள் எல்லாம் 
கல்லறையினுள் தூங்கினாலும் 
கலங்காது வந்து செல்வேன் 
காதல் என்னுள் தூங்காது இருக்கும் வரை 







Sunday, 9 December 2012

தேடுகின்றேன் உன் நினைவுகளை


பனிபடர்ந்த காலை பொழுது
உறைகின்ற குளிர் காற்று
உறையாத உன் நினைவு
தேடினேன் உன்னை

தூரத்தில் ஓர் உருவம் 
மங்கலாய் தவிப்போடு
தவறவிட்ட உன்னைத்தேடி 
அருகில் சென்றேன்   
நீ தொலைத்த என்நினைவு
திசை தெரியாமல்

தேடுகின்றேன் உன்நினைவுகளை 
நாம்நின்ற இடங்கள் தனில் 
தனித்து புலம்புகிறேன்
அனாதையான என்
நினைவுகளுடன்

வாழ்கை சகரத்தில்
வழி துணையாய் வந்தவளே
கால சகரத்தில்
காணாமல் போனதேனோ
அறிவாயோ என்
நெஞ்சின் தவிப்பை

வருவேன் என்று
சொல்லி சென்றாயே
இறந்தகாலம் முடிந்து
எதிர்காலமும் வந்துவிட்டது
வசந்த காலம் மட்டும்
வரவே இல்லை நீ இல்லாமல்

இளமையின் சுவடுகள்
முதுமையாகி ஊன்று
கோலாகி போனாலும்
காலத்தை தொலைத்து
காலனுடன் சென்றாலும்
கவனமாக பிறப்பேன்
உன் அருகில் நீங்காத
 துணையாக  
 

Thursday, 6 December 2012

முதுமையின் புலம்பல்


இளமை அகன்றுவிட  முதுமை அணைத்துக்கொள்ள
இயலாமையில் சோர்ந்துபோய் அசைபோடும் மனது

காலமதில் பயிர் செய்யாமல்  காத்திருந்த கன்னிதனையும்
கடைத்தெருவில் களைந்துவிட்டு  கவனமில்ல வாழ்வுதனை
கடமையாக வாழ்ந்தேனே

இளமைதனின் முறுக்கோடு இயலாதது ஏதுமில்லைஎன்று
அகங்காரம் அங்கமெல்லாம் ஆபரணமாய் சூடி கொண்டு 
ஆனந்தமாய் இருந்தேனே 

தனித்திருப்பது சுகம் என்றும்  இறைவன் அருள் வரம் என்றும் 
பந்த பாசங்கள் சிறை என்றும் துணை என்பது துன்பம் என்றும் 
காலமதை வீணே கழித்தேனே 
   
வாக்குகளும் வாதங்களும் வசந்தகால பருவத்திலே
வசந்தத்தை வலுவிழக்க செய்தனவே இன்று
வாதம் செய்ய கூட நீ இல்லாமல் வாய் மூடி கிடகின்றேனே

உடல் தளர்ந்து உறுதுணையும் இல்லாமல் 
உற்றாரும் பெற்றாறும் இல்லாமல் 
பலமெல்லாம் பலகீனமாய் மனமிடும் பணிஅதனை 
உடல்கூட உதாசீன படுத்தும் உரமில்லா உடல்கொண்டு 
உழலுகின்றேன் உள்ளினுள்ளே 

காலமதை தவறவிட்டு காலனுக்கு காத்திருக்கும் முதுமைதனில் 
கனவிலும் நனவிலும் கடந்துவிட்ட காலம்தனை வீழும் வரை வீழாது 
வேகும்வரை நினைதிருப்பேனே    


Friday, 30 November 2012

உருவில்லாத கனவுகள்



காகிதம் எடுத்து கைகளால் கிறுக்கினேன்

கவிதைகள் எழுத வார்த்தைகள் தேடினேன்

எதை எழுதவென்று  தெரியாமல் நின்றேன்

உன்னோடு பேச வழியும் இல்லை

என்னோடு பேச உன் விழியும் இல்லை

உன் அருகில் இருக்கும் நேரத்தை தொலைத்தேன்

என் அருகில் இருக்கும் தூரத்தை அளந்தேன்

உன்னை பார்க்க தோன்றும் தவிப்பை நீ அறிய வில்லை 

அந்த ஆசையை தவிர்க்க என்னாலும் இயலவில்லை  

நீ என் கவிதைகளை வாசிக்கிராயோ தெரியவில்லை

ஆனால் என் கவிதைகளால் வாசிக்கபடுகிறாய்

எங்கோ இருக்கும் உன் இதயம் தினம் தினம்

என் கனவுகளுக்கு இதமான ஒத்தடம்

இரவினில் கூட உன் நினைவுகளில் கனவுகள்

காலையில் கண்விழிக்கும் முன் கனவுடன் கலைந்தும் போகிறாய்

தொலைத்துவிட்டாய் உன்னுள் தேடவிட்டாய் என்னுள்

கவிதை என்று நினைத்து கிறுக்கல்களாகி முடிந்து

ருவிலாது போனது என் கனவுகளை போல



Friday, 16 November 2012

தொடர்பு எல்லைக்கு வெளியே



உன்  நினைவுகளை நிகழ்வுகளோடு
என் நெஞ்சினில் பதிவு செய்தபோது
உன் அழைப்பையும்
என் அலைபேசியில் பதிவு செய்தேனடி

வெயில் காலம் வந்தது
வெம்மையின் தாக்கத்தில் பூமியும்
வெறுமையின் தாக்கத்தில் என் மனதும் 
பெண்ணே உன் அழைப்பு இல்லாமல் 

கார்காலம் வந்தது 
கடும் குளிர் சூழ்ந்தது 
காத்திருக்க தொடங்கியது மனது 
காரிகையே உன் அழைப்பு இல்லாமல்   

கால சக்கரம் சுழன்றது 
கவலைகளும் சூழ்ந்து நின்றது 
இனி ஒரு அழைப்பு 
இல்லை என்றபோது  

சிணுங்கியது என் அலைபேசி
சிதறுண்ட மனதின் சிறிய கனவு என்று
சீண்டாமல் உட்கார்ந்திருந்தேன்
சிறிதே உற்றுபார்த்த போது 

வெயில் காலத்தின் வெம்மையும் 
குளிர் காலத்தின் குளுமையும் 
ஒருங்கே மனதில் உணர்வாய் 
காரணம் அழைப்பில் நீ ........

Tuesday, 13 November 2012

இரயில் பயணம்



நீண்ட நெடும் தண்டவாளங்கள்
நினைவுகளை சுமந்து
நிற்கிற இரயில் வண்டிகள் 

பயணங்கள் புதியதில்லை பாரங்கள் புதிது 
கண்திறந்து வெளியே மனது
பிரியா விடைதரும் உறவுகள் கூட்டம்
இருகைகளின் ஆட்டம் மரங்களின் ஓட்டம்

உள்ளூரில் கொடிகட்ட தெரியாதவர் 
அமெரிக்க அரசியலை அலசும் அவலம் 
அலைபேசியில் அளாவும் பயணிகள் 

வாங்கிய புத்தகத்தின் வாசித்த வரிகள் 
கண்களில் மட்டும் பதிந்து 
மனதில்  உதிர்ந்து போகின்ற மாயம் 

கண்மூடி உள்ளே பயணிக்கையில் 
அடுத்து இருப்வரையும் எதிர் இருப்வரையும் மறந்து 
நினைவுகள் இரயிலை விட வேகமாய்  பினோக்கி 

என் காதல்  தண்டவாளமாக 
உன்  இதயம் இரயிலாக
பதிவுகள் பயணமாக ஒரு பயணம்

சிறுவயதில் பயணித்த முதல் பயணத்தின் உற்சாகம்
உன்னுடன் கைகோர்த்து உடல் உரசி
உன்னுடன் பயணித்தபோது உணர்ந்தேனே

சாய்ந்து கிடக்கும் என் தேகம்
ன் கை பிடித்து தாளமிடும் விரல்கள்
உணர்வு ஊற்றாய் மனங்கள்

மன ஓட்டதோடு கண்விழிக்கையில்
விழி முன்னே மீண்டும்
அரசியல் அலைபேசி உரையாடல்கள்

மீண்டும் நான் மட்டும்
உன் நினைவுகளுடன் நீ இல்லாமல்
ஒரு இரயில் பயணம்

Thursday, 8 November 2012

ஏனிந்த மௌனம்


என்னை காத்திருப்பில் வைத்து
உன்னை காத்துக்கொள்ள
பாதுகாப்பாய் உள்ளே வைத்து
சாவியையும் உன்னுள் வைத்தாய்

காத்திருக்க காரணம் சொன்ன நீ
நீக்கிவிட ஏனிந்த தாமதம் கண்ணே
நீங்கி இருந்தாலும் நீங்காமல் எப்போதும்

உன்னை சுற்றி நிற்க்குமே என்மனது
உனக்காய் காத்திருந்து உறங்கிப்போன
அலைபேசியும் அடங்கிவிட்டது

எனியும் ஏனிந்த மௌனம்
என் சொல்வாய் காரணம்



Wednesday, 7 November 2012

காதல் அன்றும் இன்றும்


அன்று

பூ போன்ற பாவை  உன்னை 
பூவாக மேனி சூட 
பூஜை வரை  காத்திருந்து 
பூரணமாய் என்னுள் சேர்த்தேன் 

மென்மையான மலர் உன்னை 
மெய்யான உணர்வு கொண்டு 
மெய் உடல் தீண்டி சிலிர்த்து 
மெல்ல உன்னை அரவணைக்க 

இதழ்களில்  இதழ் சேர்த்து 
இனிமையான மதுரம் அருந்தி 
இன்புற்று காதல்கொண்டு 
இடைவெளி இல்லாமல் தனித்து இருக்க 

ஒருமுறை தான் வாழ்வினில் வரும் 
ஒருமித்த காதலது நினைவுகளில் நீங்காது நிற்கும் 
ஒரு பொழுதும் அழியாத அனுபவங்களுடன் 
ஓர்மைகளாய் பருவத்தின் பதிவுதனை கோலமிடும்  



இன்று


 

இயந்திர வாழ்கையில் 
இயங்குதல் மட்டுமே காதலாய் 
மனதொத்த காதல் நீங்கி 
உடல் சேரும் அவல காதல் 

காதல் என்னும் போர்வையினில் 
காமம் மட்டுமே இலக்கணமாய் 
கனவுகளில் கூட காசுதனை 
கணக்கு போடும் காதல் இது 

உணர்வுகளில் கூட உணர்ச்சியற்று 
மனமில்லாத மனித  எந்திரந்களாய் 
மலர் விட்டு மலர் தாவும் 
மானிட பட்சிகளாய் காதல் இன்று 

அர்பணிப்பு இல்லாமல் 
அவயங்களில் மட்டும் 
அலையாடும் காதலினால் 
நினைவுகள் கூட நிரந்தரம் இல்லை   



Sunday, 4 November 2012

நான் அவன் இல்லை


கால்மேல் காலிட்டு
கைகளில் காபி ஏந்தி
ஈர தலை கோதி
அருகருகே அமர்ந்து

குளிரும் காலை பொழுது
கைகளை கோர்த்துக்கொண்டு
கண்களால் மோதிக்கொண்டு
அதரங்களில் அர்த்த புனகையோடு 

தினம் தினம் உன் இதழ்
நனைத்து உன்னுள் புகுந்து
உன் நாடி நரம்பெல்லாம்
ஓடியாடி உன்னை பரவச படுத்தி

அது  நான் என  நினைத்தேன் 
என் அருகில் உன் கைகளில் கவனமே
செய்யபடாமல் சுவையான காபி
முத்த நீரூற்றில் உன் இதழ்களில்