வாடை காற்றில் குளிராக நிற்கிறாயோ
மேகத்தினுள் மழையாக இருக்கிறாயோ
என் அகத்தினுள் அரூபமாக நிற்கிறாயோ
என் அகந்தையை அகற்றும் கனிவாக இருக்கிறாயோ
அர்த்த ராத்திரியில் தூக்கமாக நிற்கிறாயோ
தூக்கத்தில் கனவாக இருக்கிறாயோ
அலைகடலின் ஆழமாக நிற்கிறாயோ
கடல் அலையின் நுரைகளாக இருக்கிறாயோ
உன்னை காண பூக்களாய் மலர்ந்து நிற்கிறேன்
நீயோ பாலைவனத்தில் மழையாக இருக்கிறாய்
நீ இருந்தும் இல்லாமல் நிற்கிறாய்
நான் உன்னை தொலைத்தும் தொலையாமல் தேடிகொண்டு இருக்கிறேன்




.gif)









.jpg)




